மேலும் ஒரு தமிழ் இயக்குனருக்கு கொரோனா: அதிர்ச்சியில் படக்குழுவினர்!

  • IndiaGlitz, [Tuesday,December 28 2021]

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் திரையுலகினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இயக்குனர் சுராஜை அடுத்து மேலும் ஒரு தமிழ் இயக்குனருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான அருண் வைத்தியநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கும்பமேளா பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்தார். சுமார் 150 பேருக்கும் அதிகமானவர்களுடன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் அதன் பின்னர் அவர் வாரணாசி, புத்த கயா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பின் அமெரிக்கா திரும்பினார். அமெரிக்காவில் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் அருண் வைத்தியநாதன் தற்போது வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு உள்பட பலர் நடித்து வரும் ‘ஷாட் பூட் 3’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.