அடித்த புயலில் ஒரு உண்மை செத்து விடக்கூடாது.. அமீருக்கு ஆதரவளித்த இன்னொரு இயக்குனர்..!

  • IndiaGlitz, [Thursday,December 14 2023]

இயக்குனர் அமீரின் ’பருத்திவீரன்’ விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமீருக்கு ஆதரவாக ஏராளமான திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்தனர். பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார், கரு பழனியப்பன் உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் தற்போது ’சுந்தர பாண்டியன்’ உள்பட ஒரு சில படங்களை இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'ஓயாது அலைகள்' தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கு நன்றி.... அடித்த புயலில் ஒரு உண்மை செத்து விடக்கூடாது என்பதற்காக - இந்த கடிதம்.

இதுவரை 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் அவர்கள் மீது - நீங்கள் தூவிய விஷ விதை விருட்சமாய் மாறி - அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது. நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை ஆனால், அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல - முன்னால் நிற்கிறது. அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் அவர்கள் - எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட படைப்பாளி, என்று உலகறிய செய்திருக்கிறது.

‘’மௌனம் பேசியதே , ராம், பருத்திவீரன்‘’ இந்த மூன்று படைப்புகளுமே போதும் அண்ணன் அமீர் அவர்களை - இன்னொரு பாரதிராஜா - வாக ஏற்றுக்கொள்ள என தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து -அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து, அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி.

உண்மை என்று ஏதோதோ பேசினீர்களே

இப்போது நாங்கள் உண்மை பேச ஆரம்பிகட்டா?

ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி பெற்று, பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக, ஒரு செய்தி திரைத்துறை எங்கும் உலா வருகிறதே - அதை பற்றி பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா ?

உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது. இதற்கு ஒரே தீர்வு - பேட்டியோ, மன்னிப்பு கடிதமோ அல்ல , நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு , இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு - எவ்வளவு பணத்தை ஏமாற்றுனீர்களோ - அதன் இன்றைய மதிப்பு என்னவோ -அதை - அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து - இந்த பிரச்சனையை - நீங்கள் முடித்து கொள்வதுதான். அதுவரை...! ஓயாது அலைகள்

இவ்வாறு இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறை.. மிட்வீக் எவிக்சனால் வெளியேறியவர் இவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிட்வீக் எலிமினேஷன் என்ற புதிய அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதில் ஒரு போட்டியாளர் வெளியேறி விட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள்.. விஜயகாந்த் குடும்பத்திற்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்..!

கேப்டன் விஜயகாந்த் இன்று தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கலந்து கொண்ட நிலையில் அவரால் நிமிர்ந்து உட்கார கூட முடியாமல் அவ்வப்போது சரிந்து கொண்டிருந்தார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்க்க விரும்பிய ஹாலிவுட் நடிகர்.. கார்த்திக் சுப்புராஜ் பெருமிதம்..!

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அமைச்சர் உதயநிதியுடன் சந்திப்பு.. வெள்ள நிவாரண நிதியாக சூரி கொடுத்த தொகை..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில் திரையுலக பிரபலங்கள் தாராளமாக வெள்ள நிவாரண நிதி அளித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

தேமுதிக கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர்.. விஜயகாந்த் பதவியில் யார்?

விஜயகாந்த் அரசியல் கட்சியை தொடங்கியது முதல் அவர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் புதிய பொதுச் செயலாளர்