'மீ டூ' விஷயத்தில் தமிழ் சினிமாவின் மெளனம் ஏன்? பிரபல நடிகர் ஆதங்கம்

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் இதுகுறித்து இன்னும் திரையுலகின் பிரபலங்கள் குரல் கொடுக்காமல் உள்ளனர். அப்படியே குரல் கொடுத்தாலும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பதில் கூற வேண்டும் என்று நழுவும் வகையில் பேசி வருகின்றனர். நடிகைகள் சமந்தா, வரலட்சுமி உள்பட ஒருசிலர் மட்டுமே சின்மயிக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'மீடூ விஷயத்தில் தமிழ் சினிமா மேலும் ஒருநாள் மெளனத்தில் உள்ளது. 'கடலில் மீன் ஒண்ணு அழுதா கரைக்கு செய்தி வந்து சேருமா என்று கூறியுள்ள சித்தார்த், ஒருவேளை இன்னும் சில பெயர்கள் வெளிவந்தால் மட்டுமே தமிழ் சினிமா குரல் கொடுக்குமா? என்பதை பார்ப்போம்' என்று கூறியுள்ளார்.

பணிபுரியும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிஸ்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சித்தார்த் கூறியுள்ளார்.

More News

விஜய் பட இயக்குனரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' விஜயலட்சுமி

கமல்ஹாசன் நடத்திய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தாலும் சக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து மூன்றாம் இடத்தை பெற்றவர் நடிகை விஜயலட்சுமி.

'தேவர் மகன் 2' குறித்து கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் அவர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58

'சர்கார்' உடன் தீபாவளி ரேஸில் இணையும் இன்னொரு படம்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்துடன் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா',

'ஐரா' படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்த தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்