close
Choose your channels

'சர்கார்' படத்திற்கு மீண்டும் பிரச்சனை: வழக்கு தொடரப்போவதாக சமூக ஆர்வலர் மிரட்டல்

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் கதை என்னுடையது என வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டுவிட்டதால் இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவரின் மூலம் மீண்டும் ஒரு எச்சரிக்கை மிரட்டல் வந்துள்ளது. அதாவது 'சர்கார்' உள்பட தீபாவளி அன்று வெளியாகும் படங்கள் அன்றையை தினம் கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ அல்லது அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் ஒரு ரூபாய் அதிக விலை டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் எச்சரித்துள்ளார்.

தீபாவளி அன்று வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தேவராஜின் இந்த மிரட்டலால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இவர் கமல், ரஜினி படங்கள் உள்பட பல படங்களுக்கு கூடுதல் காட்சி மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்ததற்காக பல வழக்குகளை இவர் பதிவு செய்துள்ளார் என்பதும் ஆனால் அதில் எந்த வழக்கிலும் இன்னும் தீர்ப்பு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment