'சர்கார்' படத்திற்கு மீண்டும் பிரச்சனை: வழக்கு தொடரப்போவதாக சமூக ஆர்வலர் மிரட்டல்

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் கதை என்னுடையது என வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டுவிட்டதால் இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவரின் மூலம் மீண்டும் ஒரு எச்சரிக்கை மிரட்டல் வந்துள்ளது. அதாவது 'சர்கார்' உள்பட தீபாவளி அன்று வெளியாகும் படங்கள் அன்றையை தினம் கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ அல்லது அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் ஒரு ரூபாய் அதிக விலை டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் எச்சரித்துள்ளார்.

தீபாவளி அன்று வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தேவராஜின் இந்த மிரட்டலால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இவர் கமல், ரஜினி படங்கள் உள்பட பல படங்களுக்கு கூடுதல் காட்சி மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்ததற்காக பல வழக்குகளை இவர் பதிவு செய்துள்ளார் என்பதும் ஆனால் அதில் எந்த வழக்கிலும் இன்னும் தீர்ப்பு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கதற கதற கொடூரமாக...நித்யானந்தா மீது ஆண் சாமியார் கூறிய மீடூ குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாடகி சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு கூறும் நடவடிக்கை திரைத்துறையில் மட்டுமின்றி இசைத்துறை உள்ளிட்ட பல துறைகளில்

கார்த்தியின் 'தேவ்' படத்தில் இணைந்த 'ஏழாம் அறிவு' கூட்டணி

பழம்பெரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இளம் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் முதல்முறையாக சூர்யாவின் ஏழாம் அறிவு' படத்திற்காக ஒரு பாடலை பாடினார்.

பெண் பூசாரியுடன் சபரிமலையில் பெண்களுக்கு தனி கோயில்: பிரபல நடிகரின் திட்டம்

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள்

குளியலறையில் என்னை கட்டிப்பிடித்த நடிகர்: நடிகையின் மீடூ குற்றச்சாட்டு

குளியல் அறையில் எனது அப்பா வயதுள்ள நடிகர் ஒருவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக நடிகை பிரெர்னா கண்ணா திடுக்கிடும் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படம் குறித்த முக்கிய தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் 'சீமராஜா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.