சிஎஸ்கே உடை இலவசம், ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10: பகல்கொள்ளையில் சேப்பாக்கம் மைதானம்

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அவற்றில் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல கூடாது என்பதும் அடங்கும்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சேப்பாக்கம் மைதானத்தின் உள்ளே இருக்கும் கடைகளில் ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10 என விற்பனை செய்து பகல் கொள்ளை நடப்பதாக மைதானத்தில் உள்ள ரசிகர்கள் டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் எந்த கடையிலும் வாட்டர் பாட்டில் விற்பனை இல்லாததால் வேறு வழியின்றி கிரிக்கெட் ரசிகர்கள் ரூ.10 கொடுத்து ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து வருகின்றனர்.

போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு சிஎஸ்கே உடையை இலவசமாக கொடுக்கும் ஐபிஎல் நிர்வாகம், தண்ணீரையும் இலவசமாக கொடுக்கலாமே என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் காவிரி தண்ணீருக்காக மைதானத்திற்கு வெளியே போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மைதானத்தின் உள்ளே அதே தண்ணீரை வைத்து பகல் கொள்ளை அடிப்பது சரியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More News

ஐபிஎல் போராட்டம்: பாரதிராஜா-வைரமுத்து உள்பட பலர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர், கவிஞர் வைரமுத்து

தோனியின் ரசிகர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்: பெரும் பரபரப்பு

சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் தடுக்க பல அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், அண்ணா சாலையில்

அஜித் குறித்து விஜய் தந்தை கூறியது என்ன தெரியுமா?

'அஜித் இன்னும் பல பிறந்த நாள்களை கொண்டாடி அவரது வாழ்க்கையும், தொழிலும் குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

சென்னை அண்ணா சாலையின் தற்போதைய நிலவரம்:

அண்ணாசாலையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை எரித்தும், பிரதமர் மோடி படத்தை அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் போராட்டம்.

அண்ணா சாலையில் போலீஸ் தடியடி: போர்க்களமானது போராட்டம்

சென்னை அண்ணா சாலையில் போலிசாரின் தடுப்புகளை உடைத்துவிட்டு போராட்டக்காரர்கள் வாலஜா சாலையில் நுழைய முயன்றதால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.