நயன் உடன் ஒரு சகாப்தம்.. விக்னேஷ் சிவனின் காதலர் தின க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,February 14 2024]

நயன்தாராவுடன் 10 ஆண்டுகள் கொண்ட ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது என இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் அரும்பியது. இதனை அடுத்து இந்த காதலுக்கு 10 வயது முடிந்துவிட்ட நிலையில் இன்றைய காதலர் தினத்தில் அவர் நயன்தாராவுடன் உள்ள க்யூட்டான புகைப்படங்களை பதிவு செய்து ’ஒரு சகாப்தத்தை எங்கள் காதல் நிறைவு செய்து விட்டது’ என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் நயன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் காதலிக்கும் ஒவ்வொரு நபர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள விக்னேஷ் சிவன் ’என் தங்கத்துடன் ஒரு சகாப்தத்தை முடித்து விட்டேன், நீ என் உயிராகவும், நான் என் உலகமாகவும் இருந்த நிலையில் தற்போது நமக்கு உயிர் மற்றும் உலகம் கிடைத்துள்ளது’

’நாம் முதுமையிலும் இனிவரும் பிறவியிலும் நீண்ட தூரம் பயணம் செய்யப் போகிறோம், உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்’ என்று விக்னேஷ் சிவன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.