மீண்டும் தலைவி ஆன யாஷிகா: நடத்துங்க பிக்பாஸ், இது உங்கள் ஷோ

  • IndiaGlitz, [Saturday,September 01 2018]

யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவை பிக்பாஸ் அடிக்கடி காப்பாற்றுகிறார் என்று பார்வையாளர்கள் மட்டுமின்றி கமல்ஹாசனே கடந்த வாரம் மறைமுகமாக கூறிவிட்டார். அப்போதாவது பிக்பாஸ் திருந்துவாரா? என்று பார்த்தால் மீண்டும் மீண்டும் ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் காப்பாற்றுவதிலேயே பிக்பாஸ் குறியாய் உள்ளார்.

இந்த வாரத்திற்காக ஒரு பொறுக்கும் டாஸ்க் வைத்து அதில் யாஷிகா சூப்பராக பொறுக்கியதால் அவர் இந்த வார தலைவியாகிவிட்டதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். இந்த வார நாமினேஷனின்போது தலைவி என்ற முறையில் அவருக்கு ஒரு சிறப்பு சலுகையை தந்து ஐஸ்வர்யாவும் காப்பாற்றப்படுவார். ஆகமொத்தம் மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களுக்கு எதிராக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இப்படியே போனால் 100வது நாளில் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் நிச்சயம் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இருப்பார்கள். இருவரில் ஒருவர்தான் டைட்டில் பட்டம் பெறுவார்கள் அல்லது இருவரும் சேர்ந்து டைட்டில் பட்டத்தை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நடத்துங்க பிக்பாஸ், இது உங்கள் ஷோ, உங்கள் இஷ்டப்படிதான் நடக்கும். பார்க்கும் நாங்கள் தான் முட்டாள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.