அணியில் இடம்பெற லஞ்சமா? உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் மீதான பகீர் குற்றச்சாட்டு!

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களின் தேர்வுக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படும் புகாரில் 3 உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சிக்கியிருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அன்ஷுல் ராஜ் கடந்த ஜுலை 9 ஆம் தேதி ஜார்ஜான் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் செக்யூர் கார்ப்ரேட் மேனேஜ்மண்ட் என்ற நிறுவனத்தின் தலைவர் அஷுடோஸ் போரா, சி.கே.நாயுடு தொடரில் ஹிமாச்சல பிரதேச அணிக்காக தன்னை விளையாட வைப்பதாகக் கூறி ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குத் தொடர்பாக செக்யூர் கார்ப்ரேட் நிறுவனத்தின் மீது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் இதேபோல 18 வீரர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு கிரிக்கெட்டில் விளையாட அனுமதித்து இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் மேற்கு வங்கத்தின் முன்னாள் அண்டர் 19 வீரர் தனிஷ் மிஷ்ராவும் இடம்பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஐபிஎல் வீரர் ஒருவரும் இந்த வழக்குடன் தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் டெல்லி கிரிக்கெட் வாரிய முன்னாள் கணக்காளர் சஞ்சய் பரத்வாஜ் மற்றும் அருணாச்சல பிரதேச கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் நபாம் விவேக்கிற்கும் இந்த வழக்குத் தொடர்பாக விஷயத்தில் பண வர்த்தனை நடந்திருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து டி20 கிரிக்கெட் லீக் தொடரில் வீரர்களை எடுப்பதற்காகத்தான் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறது எனச் சந்தேகம் எழுப்பி இருக்கும் நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பீகார் கிரிக்கெட் வாரியத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இளம்வீரர் எழுப்பிய லஞ்சப் புகாரில் ஐபிஎல் வீரர், உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் எனப் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

இந்த வார நாமினேஷனில் குறிவைக்கப்படும் இருவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அன்றைய தினமே புதிய கேப்டனுக்கான டாஸ்க்

திரையரங்குகளில் 100% அனுமதி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

படத்தின் புரமோஷன் விழாவில் காதலிக்கு புரபோஸ் செய்த 'வலிமை' வில்லன்!

தல அஜித் நடித்த 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா தான் நடித்த படம் ஒன்றின் புரமோஷன் விழாவில் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்த நிகழ்வு குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

துபாய் எக்ஸ்போவில் தேர்வு செய்யப்பட்ட ஜோதிகா படம்: குவியும் வாழ்த்துக்கள்!

ஜோதிகா நடித்த திரைப்படம் ஒன்று துபாய் எக்ஸ்போவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஜோதிகா படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 

ரூ.100 கோடி வசூல் செய்த 'டாக்டர்': சிவகார்த்திகேயன் சம்பளம் இத்தனை கோடி உயர்வா?

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் சிவகார்த்திகேயன் திரையுலக வரலாற்றில் முதல் 100 கோடி ரூபாய் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது