அச்சுறுத்தும் ஒமைக்ரான்… 144 தடை உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக டிசம்பர் 11,12 ஆகிய இரு தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பேரணி, ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த விதிமுறைகளை மீறினால் இந்தியத் தண்டனைச் சட்டம் 188 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தான்சானியா, இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்த இந்தியா திரும்பிய 48, 25, 37 வயதுடைய 3 பேருக்கு மும்பை நகரில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மும்பை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

மேலும் அதே மாநிலத்தின் பிம்ப்ரி சின்வாட் நகரில் தற்போது நைஜீரிய பெண்ணுடன் தொடர்புடைய 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் பாதிப்பு 17 ஆக அதிகரித்து உள்ளது.

மகாராஷ்டிராவைத் தவிர கடந்த வெள்ளிக்கிழமை குஜராத்தின் ஜாம் நகரில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் ஜிம்பாப்வேயில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் ராஜஸ்தானில் 9, குஜராத்தில் 3, டெல்லியில் 1, கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் இதுவரை இந்தியாவில் 32 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

More News

'தளபதி 66' படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷா? அவரே அளித்த விளக்கம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'எடக்கு மொடக்கு' பாடல்: இணையத்தில் வைரல்

இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் சில பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக 'கோலமாவு கோகிலா' படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசு' பாடல்,

'மாநாடு' தயாரிப்பாளர் மீது டி.ராஜேந்தர் வழக்கு: என்ன காரணம்?

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றியை சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி உள்பட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்

நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தாமரையை பேசவிடாமல் திக்குமுக்காட வைத்த கமல்: பிரியங்கா முகத்தில் குஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கிட்டதட்ட அனைத்து நாட்களிலும் தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும், டாஸ்க்கின்போது மட்டுமின்றி சாதாரண நேரத்திலும்