ரஜினியின் டுவீட்டை படித்ததும் கண்ணீர் வந்துவிட்டது. சொன்னது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,August 21 2016]

இந்தியாவின் வெள்ளி மங்கை என்று போற்றப்படும் பி.வி.சிந்துவுக்கு பிரதமர் முதல் பாமரர் வரை வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, 'நான் சிந்துவின் ரசிகர்' என்றும் பெருமையுடன் கூறியிருந்தார்.
இதுகுறித்து சிந்துவின் தாயார் பி.விஜயா கூறியபோது, 'நான் சிந்துவின் ரசிகராக மாறி விட்டேன்' என்று டுவிட்டரில் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ளார். அவர் எவ்வளவு பெரிய மனிதர். மிகப்பெரிய நடிகரான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் எனது மகளின் ரசிகர் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை படித்ததும் உண்மையிலேயே நெகிழ்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற சிந்து நாளை நாடு திரும்புகிறார். அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.