லாரி டிரைவர்களுக்கு விருந்து வைத்த ஒலிம்பிக் வீராங்கனை… கண்ணீர் சிந்த வைக்கும் காரணம்!

டோக்கியோ ஒலிம்பிக் 2021 இல் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கொடுமையான வறுமை சூழ்நிலையில் வளர்ந்து வந்ததைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் கடைக்குட்டியான இவர் தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து விளையாட்டு பயிற்சிக்குச் செல்ல வேண்டி இருந்ததாம்.

ஏற்கனவே விறகு வெட்டி வாழ்ந்துவரும் குடும்பப் பின்னணியைக் கொண்ட மீராபாய் சானுவிற்கு இது பெரும் சவாலாக இருந்திருக்கிறது. எனவே தன்னுடைய சொந்த ஊரான இம்பால் மாவட்டம் நோங்போங் கக்சிங் எனும் கிராமம் வழியாகச் செல்லும் நூற்றுக்கணக்கான மணல் லாரிகளில் லிஃப் கேட்டு தினமும் பயணித்து, மீராபாய் சானு தனது பயிற்சி கூடத்திற்கு சென்றிருக்கிறார்.

மேலும் இந்த லிஃப்ட் ஒருநாள், இரண்டு நாள் அல்ல, வருடக்கணக்கில் நடந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சொந்த நாட்டிற்கு திரும்பியவுடன் முதல் முறையாக தனக்கு லிஃப்ட் கொடுத்த 150 க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களையும் க்ளீனர்களையும் தனது வீட்டிற்கு வரவழைத்து விருந்து வைத்திருக்கிறார்.

கூடவே அவர்களுக்கு சட்டை மற்றும் மணிப்பூர் ஸ்கார்ப்களை பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்த பேசிய மீராபாய் சானு எனது கடினமான காலங்களில் இந்த லாரி ஓட்டுநர்கள்தான் எனக்கு உதவினார்கள். நான் இப்போது அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறேன். எனது பயணத்தில் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று கண்ணீர் மல்கத் தெரிவித்து இருக்கிறார். மீராபாய் சானுவின் இந்த செய்கை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More News

தலைகீழாக நின்று யோகா செய்யும் அஜித் படத்தில் அறிமுகமான நடிகை!

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தலைகீழாக நின்று யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

டிஸ்சார்ஜ் ஆகிட்டேன், ஆனா வீட்டுக்கு இன்னும் போகலை: யாஷிகா

நடிகை யாஷிகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கினார் என்பதும் அதில் அவரது உயிர்த்தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் என்பதும் தெரிந்ததே.

15 வருடங்களுக்கு முன் முதன்முதலில்... இயக்குனர் வெங்கட்பிரபுவின் மலரும் நினைவுகள்!

15 வருடங்களுக்கு முன் முதன்முதலாக தான் இயக்குனர் ஆகி 'ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்' என்று கூறியதன் மலரும் நினைவுகளை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகை 'நல்லெண்ணெய்' சித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

80களில் அறிமுகமாகி 90களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் 'நல்லெண்ணெய்' விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் இவருக்கு 'நல்லெண்ணெய்' சித்ரா என்ற பெயரில் சினிமா வட்டாரத்தில் ஏற்பட்டது. 

முன்னாள் ஆந்திர CMஉடன் சிவாஜி… “அண்ணாத்த“ பட நடிகர் பகிர்ந்த அரிய புகைப்படம்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெகபதி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும்