ஜல்லிக்கட்டு பிரச்சனை: முதல்வரிடம் மோடி கூறியது என்ன?

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்றிரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். இன்று காலை சற்று முன் அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் இருந்து வரும் அசாதாராண நிலை மற்றும் போராட்டம் குறித்து விளக்கியுள்ளார்.
மேலும் பிரதமரிடம் முதல்வர் ஓபிஎஸ் மூன்று கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
1. ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்
2. தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்
3. வர்தா புயல் நிவாரணம் விரைவில் வழங்க வேண்டும்
இந்த சந்திப்பு குறித்து பிரதமரிடன் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் கலாச்சார விழாவான ஜல்லிக்கட்டு பாராட்டத்தக்கது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும்.
தமிழகத்தின் வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் மீண்டும் தமிழகம் வரும். வறட்சியை எதிர்கொள்ள தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி.

More News

வெளிநாட்டு பானங்களை விற்க மாட்டோம். விழிப்புணர்வு பெற்ற வணிகர்கள்

வெளிநாட்டு பாங்களில் பூச்சி மருந்து கலந்துள்ளதால் அதை உபயோகிக்க வேண்டாம் என்று ஏற்கனவே பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என வணிகர்கள் அறிவித்து வருகிறனர். முதல்கட்டமாக தேனி ம

எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

'மிக்சர்' சாப்பிட்ட அந்த நடிகர் யார்? கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அந்நாட்டு மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்ததை போல ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததை, அவர் மிக்சர் சாப்பிடுவதை போல மீம்கள் சமூக வலைத்தளங்களில

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது

தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது. சென்னை மெரினாவில் ஆரம்பித்த சிறு பொறி இன்று உலகம் முழுவதும் பற்றி எரிகிறது. ஒவ்வொரு துறையாக ஆதரவு கொடுத்து கொண்டே வருவதால் போராட்டத்தின் தீவிரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது

தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது