கல்லீரல் தானம் கிடைத்தும் பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,March 02 2023]

கல்லீரல் பாதிப்பு காரணமாக பிரபல ஒடிசா நடிகர் பிந்து நந்தா உயிரிழந்தார். அவருக்கு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதால் அவருடைய ரசிகர்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டு வருகின்றனர்.

45 வயதான நடிகர் பிந்து நந்தாவிற்கு நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு இருந்த நிலையில் புது டெல்லியிலுள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் உடனடியாக மாற்று உறுப்பு கிடைக்காமல் கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் நடிகர் பிந்து நந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து உறவினர் ஒருவர் நடிகர் பிந்து நந்தாவிற்கு கல்லீரல் தானம் அளித்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இரத்தம் ஒவ்வாமை, மேலும் சில காரணங்களாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் பிந்து நந்தா உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் கடும் சோகத்தை வெளியிட்டு வருகின்றனர்.

முதலில் தொலைக்காட்சிகளில் தனது வாழ்க்கையை ஆரம்பித்த நடிகர் பிந்து நந்தா கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றியுள்ளார். தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகராக வலம்வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மனைவியுடன் சென்று பில்கேட்ஸை சந்தித்த சச்சின் தெண்டுல்கர்.. அவரே பகிர்ந்த புகைப்படம்..!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனமான பில்கேட்ஸை சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் சென்று சந்தித்த புகைப்படத்தை பதிவு

மால டம் டம்… மஞ்சர டம் டம்..  பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய நடிகை.. வீடியோ வைரல்..!

 கடந்த சில நாட்களாக மால டம் டம்… மஞ்சர டம் டம்..   என்ற பாடலுக்கு திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டான்ஸ் ஆடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

பிரபல நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு… ஸ்டெண்ட் பொருத்தி சிகிச்சை!

47 வயதான நடிகை சுஷ்மிதா சென், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் ஸ்டெண்ட் பொருத்தி அறுவை சிகிச்சை

'மாமன்னன்' படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாரி செல்வராஜ்..!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமன்னன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது என்பதும்

ஐந்து மொழிகளில் வெளியாகும் பிரியங்கா உபேந்திராவின் ஆக்சன் படம்..!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார்.