'ஜெயிலர்' படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணாவும் நடிக்க இருந்தாரா? நெல்சன் கூறிய தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,August 12 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா ஒரு சிறப்பு தோற்றத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருந்ததாகவும் ஆனால் அதை எங்களால் செயல்படுத்த முடியவில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

’ஜெயிலர்’ திரைப்படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா அவர்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கும் ஒரு திட்டம் இருந்தது. ஆனால் அவருக்காக எழுதப்பட்ட ஸ்கிரிப்டில் அவரது மாஸ்-க்கு தேவையான அளவு ஸ்கிரிப்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அவரிடம் அணுகவில்லை. ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் அவரை கண்டிப்பாக பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

ரஜினி படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா ஒரு மாஸ் காட்சியில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை என்று ரஜினி ரசிகர்கள் இந்த பேட்டிக்கு கருத்து கூறியிருக்கின்றனர்.

More News

முதல்முறையாக இணையும் பிரபுதேவா-விஜய் சேதுபதி.. மாஸ் தகவல்..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல மாஸ் நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'பேட்ட' தளபதி விஜய் உடன் 'மாஸ்டர்' உலகநாயகன் கமல்ஹாசன் உடன் 'விக்ரம்'

நாங்குநேரி பள்ளி சம்பவம்: இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ், மோகன் ஜி கண்டனம்..!

நாங்குநேரியில் ஒரு மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதி கேட்டு சிகிச்சை

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகரின் பேச்சு.. தேம்பி தேம்பி அழுத பெண் காவலர்

 போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து தமிழ் நடிகர் ஒருவர் பேசியதை கேட்டு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் காவலர் தேம்பி தேம்பி அழுத சம்பவம்  சென்னையில் நடந்துள்ளது.

இந்த உலகத்துல ரெண்டு விதமான மனிதர்கள்.. ஒண்ணு வேட்டையாடுறது இன்னொன்னு இரையாகிறது.. சசிகுமாரின் 'நா நா' டிரைலர்'..!

சசிகுமார் மற்றும் சரத்குமார் முக்கிய வேடங்களில் நடித்த 'நா நா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி

நேற்று ஒரே நாளில் மறைந்த 2 நடிகர்களின் அம்மாக்கள்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

நேற்று ஒரே நாளில் இரண்டு நடிகர்களின் அம்மாக்கள் காலமானதையடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.