பயம் தேவையில்லை.. டெல்லி தெருக்களில் யாரும் துப்பாக்கியோடு நடமாட முடியாது..! அஜித் தோவால்.

  • IndiaGlitz, [Wednesday,February 26 2020]

போதுமான அளவு வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பதால் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதுவரை இந்த வன்முறைக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்றிரவு வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, எந்தவொரு சட்டத்தையும் மதிக்கும் குடிமகனும் யாராலும் பாதிக்கப்படமாட்டான் என்று கூறினார். இது தொடர்பாக அஜித் தோவால் கூறியதாவது, டெல்லி போலீசாரின் நோக்கத்தையும், திறன்களையும் மக்கள் சந்தேக்கின்றனர். முதலில் அது சரிசெய்யப்பட வேண்டும். சீருடையில் இருப்பவர்களை மக்கள் நம்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் வடகிழக்கு பகுதியில் வன்முறை வெடித்த போது, போதுமான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவில்லை என்றும், போலீசாரின் செயலற்ற தன்மை என்று டெல்லி காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சீலாம்பூர், ஜாஃபர்பாத், முஜ்பூர், கோகுல்பூரி உள்ளிட்ட வன்முறை ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, சட்டம் ஒழுங்கு குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிமக்களிடம் ஒரு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பின்மை உணர்வு இருந்தது. எங்களை பொருத்தவரையில், அனைத்து சமூகங்களிடமிருந்தும் அச்ச உணர்வை அகற்ற விரும்புகிறோம் என்று தோவால் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிகள் அனைவரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், டெல்லி சாலைகளில் யாரும் கையில் துப்பாக்கியுடன் சுற்ற முடியாது என்று அவர் கூறினார்.

More News

உலக நாடுகளில் இதுவரை கொரோனா படுத்தி இருக்கும் பாடு!!!

கோவிட் – 19 என்று அழைக்கப் படும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

கலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?! காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.

பாஜக தலைவர் இப்படி பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று மேத்தா குறிப்பிட்டார். நீதிபதி முரளிதர் எதை செய்வார் என்று மேத்தா பயந்தாரோ அதையே இன்று முரளிதர் சிறப்பாக செய்து முடித்தார்.

டெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி

டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக கட்டுக்கடங்காத வகையில் வன்முறை, கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தில் காவல்துறையினர் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

பாஜக, கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டியது தவறு..! கவுதம் கம்பீர்.

கௌதம் கம்பீர், கபில் மிஸ்ரா ஆகிய இருவருமே பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். சொந்த கட்சியைச் சேர்ந்தவர்மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பீர் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.