நவம்பர் 3-ல் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,October 14 2017]

தமிழக அரசின் கேளிக்கை வரி 10 சதவிகிதத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்தது. இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய விழித்திரு, சோலோ போன்ற படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன

இந்த நிலையில் தற்போது கேளிக்கை வரி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்து பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட படங்கள் மட்டும் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: 

கேளிக்கை வரி விதிப்பு பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்கு இணங்கி அக்டோபர் 6 ம் தேதி வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்ட படங்கள் மட்டும் வருகிற நவம்பர் 3 ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது இதற்கு திரைத்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் மற்ற சகோதர தயாரிப்பாளர்களும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பின்படி நவம்பர் 3ஆம் தேதி 'விழித்திரு', 'சோலோ' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.