எதுவுமே உண்மையில்லை: 'சுல்தான்' படம் குறித்து விளக்கமளித்த எஸ்.ஆர்.பிரபு

கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் ’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில் திடீரென கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது சமூக வலைதளத்தில் ’கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இந்த படம் சரியான நேரத்தில் ரிலீஸாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் ’சுல்தான்’ திரைப்படத்தின் பணிகள் இன்னும் அதிகம் பாக்கியிருப்பதால் இந்த படம் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில்தான் வெளிவரும் என்றும், ‘காஷ்மோரா’ போன்று இந்த படமும் ஃபேண்டஸி படம் என்றும் இந்த படத்தில் இருந்து அனிருத் விலகிவிட்டதால் விவேக் மெர்வின் புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்துமே உண்மையில்லை என்று ‘சுல்தான்’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் இன்றும் 700க்கும் மேல் கொரோனாவால் பாதிப்பு: சென்னையில் வழக்கம்போல் அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு .

நான் இறந்தபிறகு என் உடலையாவது சொந்த ஊருக்கு எடுத்து செல்லுங்கள்: துபாயில் தவிக்கும் தமிழ் இளைஞர்

நான் இறந்த பிறகாவது என்னுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று துபாயில் தவித்து வரும் தமிழ் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை சமூக தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மியா மால்கோவாவுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்தேன்: ராம்கோபால் வர்மா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது

மனைவி சந்தேகப்படுறாங்க.. கூகுள் மேப் மீது போலீசில் புகார் அளித்த கணவர்

தான் செல்லாத இடங்களையெல்லாம் கூகுள் மேப் காண்பிப்பதாகவும், அதனால் தனது மனைவி சந்தேகப்படுவதாகவும் இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூகுள் நிறுவனம்

இந்திய இராணுவம் அறிவித்துள்ள புதிய இன்டெர்ன்ஷிப் "டூர் ஆஃப் டியூட்டி" பற்றி தெரியுமா???

இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அந்த நாட்டுக் குடிமக்கள் கட்டாயம் ராணுவத்தில்