ஒன்றல்ல ... இரண்டல்ல... 35 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருக்கிறது ஒரு வங்கி!!! அதிர்ச்சித் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,June 18 2020]

 

கொரோனா ஊரடங்கினால் உலகப் பொருளாதாரமே சரிந்து கிடக்கிறது. இது தெரிந்த விஷயம்தான். ஆனால் பொருளாதாரம் ஏற்படுத்திய நெருக்கடியால் ஒரு வங்கி தனது 35 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HSBC நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமான வங்கியாக அறியப்படுகிறது. தற்போது இந்த வங்கி ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பொருளாதார ஊரடங்கினால் வங்கியின் பொருளாதாரம் நெருக்கடியான நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது, எனவே நிலைமையை சமாளிக்கும் விதமாக ஆட்குறைப்பு செய்யப்படும் என உலகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் பணியாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்நிறுவனம் ஆட்குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற நடைமுறைகளில் ஈடுபட ஆரம்பித்தது. கடந்த மார்ச் மாதம் 4.5 பில்லியன் டாலர்களை சேமிப்பதற்காக இதேபோன்ற ஆட்குறைப்பு செய்கைகளைக் கையில் எடுத்தது. அந்த நடவடிக்கை கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பொருளாதாரத்தை எப்படியும் சரிக்கட்ட முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அனதால் 35 ஆயிரம் பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்ற அதிரடி அறிவிப்பு வெளியிடப் பட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை தொடர்ந்து இழந்து வரும் சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பல இடங்களில் வேலைக்கான சம்பளத்தை குறைக்கும் நடவடிக்கைகளும் தொடர்கிறது. ஸ்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இப்படி தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் இதுவரை கிளம்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

10 வருடத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மர்ம முட்டை!!! பதில் கிடைத்து விட்டது!!!

10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான மர்ம முட்டை குறித்து விஞ்ஞானிகள் எந்தத் தகவலும் தெரியாமல் விழித்து வந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சீனப் பெருஞ்சுவரை உடைப்போம்: பார்த்திபன் டுவிட்டால் பரபரப்பு

இந்திய-சீன எல்லையான லடாக் அருகில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய சீன ராணுவ வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் இருந்து 20

கல்வான் பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் வெடித்தது எப்படி??? செயற்கைக்கோள் புகைப்படம்!!!

இந்தியா தற்போது எல்லைப் பகுதியில் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது

காணாமல் போன கொரனோ நோயாளி: ஒரு வாரம் கழித்து கழிவறையில் கண்டுபிடித்ததால் அதிர்ச்சி 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரம் கழித்து அந்த நோயாளியின் இறந்த உடல் கழிவறையில்