அடுத்தடுத்து இரண்டு புயல்கள்; தமிழகதில் கனமழைக்கு வாய்ப்பு

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் ஆகிய இரண்டு புயல்களால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், ஆனால் இந்த இரண்டு புயல்களும் தமிழகத்தில் கரையை கடக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள லூபன் என்ற புயல் ஓமனில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக உருவாகி வருகிறது. இந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி ஒரிசா அருகே கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வரும் 10ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக்கடல், வங்கக்கடல் என இரண்டு பக்கங்களிலும் புயல் ஏற்பட்ட போதிலும் இந்த இரண்டு புயல்களும் தமிழகத்தில் கரையை கடக்காது என்பதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

More News

புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்ற அபிராமி: காரணம் என்ன?

கள்ளக்காதலால் பெற்ற குழந்தைகளை கொலை செய்த குன்றத்தூரை சேர்ந்த அபிராபி புழல் சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

4 மொழிகளில் வெளியாகும் ராம்கோபால் வர்மாவின் 'சாதீய காதல் கதை'

சமீபத்தில் வெளியான சாதிய காதல் கதை படமான 'பரியேறும் பெருமாள்' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டிலும்

விஜய் தந்தை எஸ்.ஏ.சி மீதான வழக்கு: சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமின் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

ஐஸ்வர்யா வெளியேறாதது வியப்பை அளித்தது: ரித்விகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளரான ரித்விகா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா வெளியேறுவார் என நாங்கள் அனைவரும் நினைத்தபோது திடீரென சென்றாயன் வெளியேறியது

'பேட்ட' படக்குழுவினர்களுக்கு 'குணமா' கோரிக்கை விடுத்த கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கோரிக்கையை தனது படக்குழுவினர்களுக்கு முன்வைத்துள்ளார்.