ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில், நீட் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லையா?

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினர்களும், தனிப்பட்ட வகையிலும் பலர் உதவி செய்து வருகின்றனர். மேலும் தமிழக அரசும் நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மற்றும் 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்றும் அதுமட்டுமின்றி மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ராஜ்ஸ்தான் உள்பட வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க ரயில்வே துறை மறுத்துவிட்டது. இதுகுறித்து ரயில்வேத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், 'சிறப்பு ரயில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும், கோரிக்கை வைத்தாலும் 8,500க்கும் மேற்பட்டோர் செல்லும் வகையில் உடனடியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடியாது என்றும் அறிவித்துள்ளது.

இதே ரயில்வே துறை தான் சென்னையில் இருந்து புனேவுக்கு ஐபிஎல் போட்டிக்காக சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்கு அம்சமான ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யும் ரயில்வே துறை, மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More News

இந்தியாவில் முதல் முயற்சி எடுக்கும் விஷாலின் 'இரும்புத்திரை

விஷால் நடிப்பில் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ள இரும்புத்திரை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் புரமோஷன்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஓட்டுக்கு ஐயாயிரம், நீட்டுக்கு ஆயிரமா? நடிகை கஸ்தூரி காட்டம்

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 தருவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். 

'காலா' இசை வெளியீடு நடைபெறும் இடம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா திரைப்படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி நடைபெறும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார்

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிக்கரம்

தமிழக மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கு, நீட் தேர்வு எழுத இடமில்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்

இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை சி.பிஎஸ்.இ. அமைத்துள்ளது