எனக்கு செண்டிமெண்ட் கிடையாது.. ராகு காலத்தில் படம் ஆரம்பித்து காட்டுகிறேன்.. விஜய் ஆண்டனி

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

எனக்கு ராகு காலம், எமகண்டம் சென்டிமென்ட் எல்லாம் கிடையாது என்றும், நீங்கள் எந்த டைம் கொடுத்தாலும் அந்த டைமில் நான் படம் ஆரம்பித்து காட்டுகிறேன் என்றும், ’மழை பிடிக்காத மனிதன்’ செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்தார்.

வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி அந்த படத்தின் மேக்கப்பை கூட கலைக்காமல் அப்படியே ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கு விஜய் ஆண்டனி வந்த நிலையில் இது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. மேக்கப்பை கலைத்தால் அதற்காக கால தாமதமாகும், இந்த நிகழ்ச்சிக்கு காலதாமதம் இல்லாமல் வரவேண்டும் என்பதற்காகத்தான் அப்படியே மேக்கப்போடு வந்துவிட்டேன்’ என்றும் இயக்குனர் இடம் அனுமதி கேட்டு விட்டு தான் வந்தேன் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

ஒரு புதிய படம் ஆரம்பிக்கும் போது திரை உலகை பொருத்தவரை சென்டிமென்ட் பார்ப்பார்கள், ஆனால் உங்களுக்கு அந்த சென்டிமென்ட் இல்லை என்று சொன்னீர்களே என்று கேட்டபோது ’ஆமாம் எனக்கு சென்டிமென்ட் இல்லை என்று கூறிய விஜய் ஆண்டனி , ராகு காலம் எமகண்டம் என எந்த நேரத்திலும் என்னால் பட ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் ‘ராகுகாலம் எமகண்டம்’ தான் எனது அடுத்த படத்தின் டைட்டில், நான் விரைவில் பதிவு செய்யப் போகிறேன்’ என்றும் அவர் தெரிவித்தார்

சினிமா ஹீரோ என்பவர் ரொம்ப அதிர்ஷ்டசாலி, ஒரு தயாரிப்பாளர் சினிமா ஹீரோவை ராஜா போல் பார்த்துக் கொள்வார். சமீபத்தில் கடலில் ஒரு காட்சியில் படப்பிடிப்பு நடக்கும் போது விபத்து ஏற்பட்ட போது உடனடியாக அருகில் இருந்த டெக்னீசியன்கள் எல்லோரும் என்னை காப்பாற்றினார்கள், ஒருவேளை நான் வேறு துறையில் இருந்து கடலில் விழுந்திருந்தால் என்னை யாரும் காப்பாற்றி இருக்க மாட்டார்கள்’ என்றும் அவர் கூறினார்.