சர்வாதிகாரியாக மாறிய நிக்சன் .. மழையில் முட்டி போட சொன்னதால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,November 29 2023]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் கேப்டனாக நிக்சன் இருக்கிறார். அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கவும் அவரை நேரடியாக நாமினேட் செய்யவும் சதிகள் செய்யப்படுகின்றன என்பதும் ஆனால் அந்த சதிகளை நிக்சன் முறியடித்து தொடர்ந்து கேப்டனாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் அரண்மணையாக மாறிய பிக்பாஸ் இல்லம் என்ற டாஸ்க் வைக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கில் கேப்டன் நிக்சன் அரசனாக முடிசூட்டப்படுகிறார். விசித்ரா அவருக்கு முடிசூட்டி வைக்கிறார்.

அரசனாக மாறிய நிக்சன் திடீரென சர்வாதிகாரியாக மாறி விஷ்ணு, விக்ரம் மற்றும் ரவீனா ஆகிய மூன்று பேரையும் மழையில் முட்டி போட வைக்க சொல்கிறார். இதனை அடுத்து மூன்று பேரும் மழையில் முட்டி போட வேண்டிய நிலையில் உள்ளது. அது மட்டும் இன்றி கூல் சுரேஷ் சிறைக்கும் அனுப்பப்படுகிறார். மேலும் மாயா மற்றும் ஜோதிகாவும் மழையில் முட்டி போடுகின்றனர்.

மொத்தத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி சக போட்டியாளர்களை பழிவாங்கி வரும் நிக்சனை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சேர்ந்து கவிழ்ப்பார்களா என்பதை இன்றைய எபிசோடில் தான் தெரிந்து கொள்ள முடியும்.