நானெல்லாம் கலாய்க்க ஆரம்பிச்சா உட்கார்ந்து மூணு நாள் அழுவ.. சொருகிடுவேன்: ஓவராய் பேசும் நிக்சன்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

இன்றைய முதல் புரமோவில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே நடந்த சண்டை குறித்து பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவிலும் அவர்கள் இருவரது சண்டை காட்சிகள் இருப்பதால் இன்றைய எபிசோடு முழுவதும் இருவரது சண்டைதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய அடுத்த புரோமாவில் ’வைல்ட் காட்டில் எப்படி வந்தியோ, அப்படியே ஓடிப் போயிரு, என்று நிக்சன் சொல்ல, உடனே ’ரொம்ப ஓவரா துள்ளாத’ என்று அர்ச்சனா சொல்ல ’சும்மா உக்காந்து உப்புமா சாப்பிடுவதற்காக வந்துவிட்டா’ என்று நிக்சன் சொல்ல உடனே அர்ச்சனா ’போடா’ என்று சொல்கிறார்

’நீ அழுவுறேன்னு சொல்லிட்டு அமைதியா இருந்தா, உனக்கு பயந்து போறான்னு நினைச்சியா, நான் எல்லாம் கலாய்க்க ஆரம்பிச்சேன்னா, நீ எல்லாம் உட்கார்ந்து மூணு நாளைக்கு அழுவ, அவ மூஞ்சிய பாரேன் மூஞ்சிய பாரேன், சொருகிடுவேன்’ என்று நிக்சன் கூறுகிறார்.

நிக்சனின் வயலன்ஸ் பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சொருகிடுவேன் என்று சொல்வது கொலை மிரட்டலுக்கு சமம் என்றும் கூறி வருகின்றனர்.