சரிதான் போடா... நிக்சனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த அர்ச்சனா..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரமோவில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை வரும் நிலையில் அர்ச்சனா ’போடா’ என சர்வ சாதாரணமாக பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் முதல் நாள் முதல் சண்டை சச்சரவு போட்டியாளர்களிடையே வந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த பின் கிட்டத்தட்ட அவர் எல்லோருடனும் சண்டை போட்டுவிட்டார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆதரவும் அதிகரித்து வருகிறது

இந்த நிலையில் இன்று நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை மூண்டுள்ளது. சண்டையின் போது அர்ச்சனா, ‘வினுஷா குறித்து நீ என்ன சொன்னாய் என்பது நான் வெளியில் இருக்கும் போதே தெரியும்’ என்று கூற அதனால் ஆத்திரமடையும் நிக்சன் அதை பத்தி எல்லாம் நீ பேசாதே என்று ஆவேசமடைய, அவரை விக்ரம் சரவணன் சமாதானப்படுத்துகிறார்

அப்போது அர்ச்சனா, ‘மரியாதையா பேசு, போடா’ என்று கூறியதால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிக்சன் இருக்கிறார். அதன் பிறகு நிக்சன் ’நீ எல்லாம் ஒரு பொண்ணே இல்லை கருமம்’ என்று கூறுவதுடன் இன்றைய ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் இன்றைய எபிசோடு அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே ஆவேசமான சண்டை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்த வார எலிமினேஷனில் திடீர் முடிவு எடுத்த பிக்பாஸ்.. பார்வையாளர்களின் ரியாக்சன் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் குறித்த முக்கிய

சூர்யா, கார்த்தியை அடுத்து வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி செய்த இளம் ஹீரோ..!

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் அடிப்படை தேவை கிடைக்காமல் தத்தளித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும்

அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை: சென்னை வெள்ள பாதிப்பு குறித்து சந்தோஷ் நாராயணன்..!

சென்னையில் ஏற்பட்ட புயல் பாதிப்புக்கு அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசை ஆகியவைதான் இந்த நிலைக்கு காரணம் என்று  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்துடன்

கோடிகளில் ஏன் சந்திராயன்? மக்கள் வரிப்பணத்தை அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்துங்கள்: பார்த்திபன்

தண்ணீர் இருக்கிறதா? என ஆராய, சந்திரனுக்கு சந்திரயானும், செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? மக்கள் வரிப்பணத்தை அடிப்படை

புயல் பாதிப்பு எதிரொலி: மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய வேண்டுகோள்..!

சென்னை உள்பட ஒரு சில மாவட்ட  மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுமாறு