மும்பை ஆசிரமத்தில் ஒரு மாதம் இருந்தாரா நிர்மலாதேவி?

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிர்மலாதேவி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கும் அவரது கணவர் சரவண பாண்டியன் என்பவருக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டது உண்டாம். இந்த நிலையில் நிர்மலாதேவியை அவரது கணவர் விவாகரத்து செய்ய முயன்றபோது அவர் தற்கொலை செய்துகொள்வதாக கணவரை மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் கடந்த ஆண்டு திடீரென ஒரு மாதம் நிர்மலாதேவி காணாமல் போய்விட்டதாகவும், அவரை உறவினர்கள் தேடி அலைந்தபோது அவர் மும்பையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது நிர்மலாதேவி பெரும் சர்ச்சையில் சிக்கியிருப்பதை அடுத்து மீண்டும் அவரது கணவர் விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

More News

சானியா மிர்சாவுக்கு கிடைக்கும் புதிய பதவி

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை விட்டே சென்றுவிடுவேன்: ஞானவேல்ராஜா கூறியது ஏன்?

முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஞானவேராஜா. இவரது தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடித்த '‘என் பெயர் சூர்யா... என் வீடு இந்தியா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது

சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை!

சென்னையில் கடந்த சில நாட்களாக காவல் துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

எச்.ராஜா, கனிமொழி கேள்விகளை ரஜினிகாந்த் தவிர்ப்பது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த்,

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூலில் ஃபார்வேடு செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.