நிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்டு வந்த கருப்பசாமி சரண்

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணையில் உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் மற்றும் கவர்னர் நியமனம் செய்த சந்தானம் கமிஷன் ஆகியோர் தனித்தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிர்மலாதேவிக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரிடமும் விசாரணை செய்ய போலீசார் முயன்றபோது இருவரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் மாணவர் கருப்பசாமியும் சரண் அடைந்தார்.

மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்த கருப்பசாமியை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளனர். முருகன், கருப்பசாமி ஆகியோர்களிடம் விசாரணை செய்தால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மேலும் பலர் குறித்த தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

More News

சிறை செல்வது எங்களுக்கு கோவிலுக்கு செல்வது போல்: மன்சூர் அலிகான்

சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான், 'நாம் தமிழர் கட்சியினர்களுக்கு சிறை செல்வது கோவிலுக்கு செல்வது போல் ' என்று கூறியுள்ளார்

அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி மாற்றம்

அரவிந்த்சாமி நடிக்கும் "பாஸ்கர் ஒரு ராஸ்கல் " திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து விலகியது ஏன்? கமல் முன் தெளிவுபடுத்திய வழக்கறிஞர் ராஜசேகர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகினார் என்ற செய்தி இன்று காலையில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. இந்த செய்தியை வழக்கறிஞர் ராஜசேகரும் மறுக்கவில்லை

எஸ்.வி.சேகர் கருத்து குறித்து கமல் கூறியது என்ன?

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி,.சேகர் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார்.

நடிகையை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி

சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக தான் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவலை அளித்து வரும் ஸ்ரீரெட்டி டோலிவுட் திரையுலகின் பல பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.