9 நாள் கேப்பில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டம்வென்று 16 வயது சிறுவன் அசத்தல்!

  • IndiaGlitz, [Saturday,July 10 2021]

இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரம் நிஹல் சரின் வெறும் 9 நாட்கள் இடைவெளியில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தல் சானையை செய்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இவர் தற்போது சர்வதேச அளவில் முதல் 100 இடத்திற்குள் பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் செர்பியாவின் பெல்கிறேட் நகரில் நடைபெற்ற செர்பியா ஓபனில் கிராண்ட் மாஸ்டர் Vladimir Fedoseev போட்டியில் 9 சுற்றுகள் விளையாடி 7.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன்பு சில்வர் லேக் ஓபனில் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதனால் 9 நாட்கள் இடைவெளியில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020 ஜுனியர் ஸ்பீடு ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்ற இவர் தற்போது இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டராக அறியப்படுகிறார். தற்போது 9 நாட்கள் இடைவெளியில் 2 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சர்வதேச அளவிலான ரேங்கிங்கில் முதல் நுறு இடங்களை பிடித்துள்ளார். தற்போது அவர் 88ஆவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நிஹல் சரினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

More News

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம் வேதா'. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது

இந்தியாவிற்காக அமெரிக்காவில் நிதி திரட்டிய விஜய்பட நாயகி… நன்றி தெரிவித்து உருக்கம்!

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “தமிழன்”.

என்னிடம் கேட்டால் நான் பதில் தருகிறேன்” அமீர்கான் வதந்தி குறித்து பாலிவுட் நடிகை

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் அமீர்கானும்

ஓடிடியில் நயன்தாராவின் அடுத்த படம்: ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கேக் வெட்டி கொண்டாடிய 'மாநாடு' படக்குழு: காரணம் இதுதான்!

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது