close
Choose your channels

வரலட்சுமியின் முதல் காதலன் நான் இல்லை.. நிக்கோய் சச்தேவ் பேட்டி..!

Monday, July 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வரலட்சுமி சமீபத்தில் மும்பை தொழிலதிபர் நிக்கோய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இன்று சென்னையில் இந்த தம்பதிகள் பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் சச்தேவ் பேசிய போது 'எனக்கு தமிழ் தெரியாது, ஆனாலும் விரைவில் தமிழ் கற்றுக் கொள்கிறேன். இனிமேல் எனது வீடு மும்பை அல்ல, சென்னை தான்.

திருமணத்திற்கு பிறகு வரலட்சுமி சரத்குமார் என்ற பெயரை வரலட்சுமி சச்தேவ் என்று அவர் மாற்ற மாட்டார். அவர் தனது முந்தைய பெயரிலேயே தொடர்வார். ஆனால் அதே நேரத்தில் நான் நிக்கோலாய் வரலட்சுமி என்று என்னுடைய பெயரை மாற்றிக் கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்தார்

மேலும் வரலட்சுமியின் முதல் காதலன் நான் அல்ல, சினிமாதான். எனவே அவர் காதலிக்கும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார், நாளை முதல் அவர் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார், நானும் என் மனைவிக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்’ என்று தெரிவித்தார்.

இதை அடுத்து பேசிய வரலட்சுமி ’என்னுடைய காதல் கணவர் நிக்கோலாய் சச்தேவ் தான், ஆனால் அதே நேரத்தில் சினிமா என்பது என்னுடைய உயிர், திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று பலர் கேட்டார்கள். அதற்கான பதிலை என் கணவரே சொல்லிவிட்டார் என்பதால் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள், அதற்காகவாவது நடிப்பேன்’ என்று அவர் கூறினார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment