சென்னையில் இயக்குநர்  வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை.. நக்சல்களுடன் தொடர்பா?

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை என்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடியாக சோதனை செய்தனர் என்பதும் இதனை அடுத்து ஒரு சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையின் பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில், திடீரென இன்று காலை சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த முகில் சந்திராவின் வீடு சென்னை கொளத்தூரில் இருக்கும் நிலையில் அவரது வீட்டில் சோதனை செய்து வருவதாகவும், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் காரணமாகவும், அவருக்கு நக்சல்களுடன் தொடர்பு என்ற என்பது குறித்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையிலும் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

More News

'லெஜண்ட் சரவணன்' படத்தை இயக்குவது தனுஷ் பட இயக்குனரா? அவரே கூறிய விளக்கம்..!

பிரபல தொழிலதிபர் 'லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட் 'என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

சைதை துரைசாமி மகன் நிச்சயம் திரும்பி வருவார்.. தமிழ் திரைப்பட ஹீரோ நம்பிக்கை..!

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் காணாமல் போன நிலையில் அவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்

'லால் சலாம்' படத்தின் சிங்கிள் பாடல்.. தேனிசை தென்றலின் உருக வைக்கும் குரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை விவாகரத்தா? 12 ஆண்டு மணவாழ்க்கை முடிகிறது..!

பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது

ரூ.7 கோடி நன்கொடை கொடுத்த அதே பள்ளிக்கு மீண்டும் ரூ.3 கோடி.. ஆயி பூரணம்மாளுக்கு குவியும் வாழ்த்து..!

மதுரையைச் சேர்ந்த ஆயி பூரணம்மாள் என்பவர் சமீபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு தானமாக கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு 3 கோடி ரூபாய்