நெய்வேலியில் பாய்லர் வெடித்து விபத்து: 10 பேர்கள் படுகாயம்

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இன்று காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்ததால் ஆயிரக்கணக்கானோர் திடீர் திடீரென மயங்கி விழுந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு விபத்து நெய்வேலியில் நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் வரை காயமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் சற்று முன்னர் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது. இதனால் அங்கு பணியில் இருந்த 10 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அனல் மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக நெய்வேலி அனல்மின் நிலைய வளாகம் முழுவதும் புகை மூட்டத்துடன் சூழப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

மது அருந்திவிட்டு வந்த கணவர், மகளுடன் தீக்குளித்த மனைவி: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது.

கோயம்பேடால் குவிந்த கொரோனா நோயாளிகள்: இன்று 580 பேர்களுக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கு மேல் இருந்து வரும் நிலையில் இன்றும் ஐநூறுக்கும் மேல் அதாவது 580 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக

மெடிக்கல் கடையில் ஆல்கஹால் விற்குமா? நடிகை ரகுல் ப்ரித்திசிங் கேள்வி

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டு டாஸ்மார்க் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு வருகிறது.

என்று தணியும் கொரோனா!!! எப்போது முடிவுக்கு வரும்??? தொடரும் கேள்விகளுக்கு விளக்கம்!!!

ஒரு பெருந்தொற்றை எப்படி அளக்கலாம் என்பதைப் பற்றிய கணக்கீட்டு வடிவத்தை முதன் முதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் ஃபார் என்பவர் உருவாக்கினார்.

கடும் உணவுப் பற்றாக்குறையில் தத்தளிக்கும் ஏமன்: 225 மில்லியன் டாலர் நிதி வழங்கும்  அமெரிக்கா!!!

ஏமன் நாட்டில் நிலவும் கடுமையான உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அமெரிக்க அரசு, 225 மில்லியன் டாலர் தொகையை அவசர  உதவியாக வழங்க முன்வந்து இருக்கிறது.