இன்று ஒருநாள் குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்...?  என்னென்ன நடக்கும் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

குளித்து விட்டு கோயிலுக்கு சென்றால் அது தமிழ் புத்தாண்டு என்றும், குடித்துவிட்டு கும்மாளம் போட்டால் அது ஆங்கில புத்தாண்டு என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் நிலையில் இன்றைய புத்தாண்டு தினத்தில் பெரும்பாலானோர் நட்சத்திர ஓட்டல்களிலும் பார்களிலும் குடிக்கும் திட்டத்தை வைத்திருப்பார்கள்.

புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு மகிழ்ச்சியாக இருப்பது கூட தவறில்லை. ஆனால் இன்று ஒருநாள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் வாழ்க்கையே திசை மாறும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு மற்றும் வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தடையில்லாச் சான்றிதழ் கிடைக்காது என்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்க வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த மையங்களில் இருப்பதாகவும் கூறப்படுவதால் குடித்துவிட்டு இன்று வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட மது அருந்தாமல் கொண்டாடலாம் என்றும் ஒருவேளை மது அருந்தினால் வாகனம் ஓட்டாமல் வீடு செல்லவும் புத்தாண்டு தினத்தில் போலீஸ், கேஸ் என்று சிக்காமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

More News

3வது திருமணம் செய்ய 2 வயது குழந்தையை கொலை செய்த 23 வயது இளம்பெண்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏற்கனவே 2 திருமணம் செய்த நிலையில் மூன்றாவது திருமணம் செய்வதற்காக தனது இரண்டு வயது குழந்தையை கொலை

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்கும் ரஜினி-விஜய் தயாரிப்பு நிறுவனம்!

விஜய் சேதுபதி தற்போது விஜய் நடித்து வரும் 'தளபதி 64' உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

நடிகரை சுத்தியலால் அடித்து கொலை செய்த நடிகை: சென்னையில் விபரீதமான கள்ளக்காதல்: 

கள்ளக்காதல் விபரீதம் ஆனதால் துணை நடிகர் ஒருவரை துணை நடிகை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது

தேவதாசி விவகாரம்: தாயாருக்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி

சமீபத்தில் பாடகி சின்மயியின் தாயார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தேவதாசி முறையை தான் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.