ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

கோலிவுட் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, அருவி, என்.ஜி.கே உட்பட பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது

இந்த நிலையில் இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சர்வானந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'விஐபி 2', துருவ நட்சத்திரம் உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கிஷோர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இயக்குநர் தருண் பாஸ்கர் வசனம் எழுத உள்ளார். ஜேக்ஸ்பிஜாய் இசையில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு சுஜித் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'நேர்மை' டுவீட்டால் சமுத்திரக்கனி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக 'அடுத்த சாட்டை' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள

கைது வாரண்ட் எதிரொலி: நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!

நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலையில் நடிகர் விஷால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் 

பொய்ப்புகார் கூறி புகழ்பெற முயற்சி: மீராமிதுன் குற்றச்சாட்டு

சமூகத்தில் பிரபலமாக இருக்கும் என் மீது பொய் புகார் கூறி ஒருசிலர் புகழ் அடைய முயற்சிப்பதாக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழ் இயக்குனர் என்னிடம் தவறாக நடந்தார்: வித்யாபாலன்

நடிகை வித்யாபாலன் தமிழகத்தை பூர்விகமாக கொண்டிருந்ததாலும் தமிழ் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. பாலிவுட் திரையுலகில் கொடி

தெருக்கூத்து டாஸ்க்கில் சொதப்பிய லாஸ்லியா? சாண்டியை தள்ளிவிட்டதால் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் நேற்று பொம்மலாட்டம் கலையை பிக்பாஸ் போட்டியாளர்கள் சிறப்பாக செய்து காட்டி அனைவரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில் இன்று தெருக்கூத்து கலையை