விஜய் மக்கள் இயக்கத்தில் புதிய அணி.. 234 தொகுதிகளிலும் பூத் நிர்வாகிகள்.. விறுவிறுப்பாகும் அரசியல் களம்..!

  • IndiaGlitz, [Tuesday,August 01 2023]

தளபதி விஜய் அரசியலுக்கு வருவதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதை பார்க்கும் போது அவர் விரைவில் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கவுரவித்த விஜய் அடுத்த கட்டமாக தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது அவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தில் வழக்கறிஞர் பிரிவு புதிதாக உருவாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஈடுபட்டு வருவதாகவும் வழக்கறிஞர் பிரிவின் முதல் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மட்டுமே நடந்துள்ள நிலையில் தற்போது புதிதாக அமைக்கப்பட இருக்கும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக 234 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

More News

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ்.. பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டால் அதற்கு தனுஷ் தான் சரியான நபர் என்று பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'ஜெயிலர்' டிரைலர் ரிலீஸ் தேதி.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி மோகன்லால், சிவராஜ்குமார் உள்பட மல்டி ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில்

தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் முன்பே அண்டை மாநிலத்தில் ரிலீஸ் ஆகும் 'ஜெயிலர்' திரைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஒருவழியாக 'போர் தொழில்' ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்..!

 சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான 'போர் தொழில்' என்ற திரைப்படம்  கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் எதிர்பாராத வகையில் சூப்பர் வெற்றி

லிமிடெட் எடிஷன்: சிங்கப்பூரில் இருந்து செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள செம்ம கிளாமர் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.