அப்ப காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் ப்ளீஸ்: நெட்டிசன்கள் கிண்டல்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

காவிரி மேலாண்மை அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதற்காக கடந்த சிலநாட்களாக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதிகிருஷ்ணன் இன்று காவிரி விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டத்தால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும்  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வோம். என்றும் அவர் ஆவேசமாக கூறியதால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

நவநீதிகிருஷ்ணன் எம்பி கூறிய இந்த விஷயத்தையும் நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை. எங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நவநீதகிருஷ்ணன் சொன்னது நடந்தால் போதும் என்று ஒருசில நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

More News

பிரபல இயக்குனர் மீது நடிகை கூறிய பாலியல் புகார்

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவது காலங்காலமாக நடைபெற்று வந்தாலும், கடந்த சில வருடங்களாக நடிகைகள் இதனை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

வாழ்க்கை ஒரு வட்டம்: ராம்கோபால்வர்மா கூறிய உதாரணம் இதுதான்

தளபதி விஜய் நடித்த ஒரு படத்தில் 'வாழ்க்கை ஒரு வட்டம்' என்ற வசனம் வரும். இந்த வசனம் அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும்,. இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால்வர்மா வாழ்விலும் தற்போது நடந்துள்ளது.

விஜய்சேதுபதியை அடுத்து உதயநிதிக்கு பிரபல இயக்குனர் கொடுத்த பட்டம்

நடிகர் விஜய்சேதுபதி பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான 'தர்மதுரை' படத்தில் நடித்தபோது அவருக்கு 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தை கொடுத்தார்.

பெற்ற தாயை மதுவுக்காக கொலை செய்த மகன்

குடிகார மகனை தாய் கண்டிப்பதைத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மதுவுக்காக மல்லுக்கட்டி பெற்ற தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

ஐபிஎல் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளும் நடிகர்களின் விபரங்கள்

2018ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் வெகு உற்சாகமாக உள்ளனர்.