உலக தரத்தில் ஒரு காதல்: வைரலாகும் விக்னேஷ்-நயன்தாரா புகைப்படங்கள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு இருவரும் இணைந்து சுற்றுலா செய்துவருவதால் இருவரின் திருமண தேதி நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா-விக்னேஷ் இருவரும் நெருக்கமாக இருக்கும் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவனின் அரவணைப்பில் நயன்தாரா நெருக்கமாக இருப்பது போன்று இருக்கும் இந்த இரண்டு புகைப்படங்களும் இருவரும் எந்த அளவுக்கு அந்நியோன்யமாக இருக்கின்றார்கள் என்பதை காட்டுவதாகவும், அதேபோல் நயன்தாராவின் கையில் உள்ள செல்போனில் இருக்கும் செல்பி புகைப்படமும் இருவரின் ரொமான்ஸை நிரூபிப்பது போல் உள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் தரமான விமர்சனங்களில் ஒன்று, ‘உலகின் சிறந்த காதல் ஜோடிகளில் ஒன்று’ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நட்சத்திர காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

More News

லாட்டரியில் பரிசு: உண்மையாகிய கவுண்டமணி ஜோக்!

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு படத்தில் தனக்கு லாட்டரி சீட்டு விழுந்ததாக எண்ணிக் கொண்டு தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் திமிருடன் பேசுவார்,

உங்க அம்மா பேரு கூத்தாடியா? டுவிட்டரில் ஆவேசம் அடைந்த குஷ்பு!

மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சட்டம் குறித்து கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு

'விக்ரம் 58' படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் 'விக்ரம் 58' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்

வெற்றிப்பட இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி?

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கைதி' மற்றும் 'தம்பி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களின்

வெற்றி பெற்றவர் கூட தற்கொலையா? லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலை குறித்து பிரபல நடிகை!

லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவின் ராமன் அவர்கள் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.