இது முறையல்ல: அர்ச்சனாவின் மகளிடம் கேள்வியால் துளைக்கும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அர்ச்சனாவின் 13 வயது மகளிடம் நெட்டிசன்கள் முறையற்ற கேள்வி கேட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அர்ச்சனாவின் மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய அம்மாவை மிஸ் செய்வதாகவும் 70 நாட்களாக தன்னுடைய அம்மாவை பிரிந்து இருப்பதாகவும் பதிவு செய்திருந்தார்

இதற்கு நெட்டிசன்கள் ’உங்கள் அம்மா இந்த வாரம் எவிக்ட் ஆகிவிட்டார், நீங்கள் இனிமேல் அவரை மிஸ் செய்ய மாட்டீர்கள் என்று ஒரு நெட்டிசனும், அன்பு ஜெயிக்கும்ன்னு நம்புரியா? இதை உங்க அம்மா கிட்ட கேளு’ என்று ஒருவரும், ‘கவலைப்படாத ஞாயிறு அன்று உங்கள் அம்மா வீட்டுக்கு வந்திருவாங்க என்று ஒருவரும், இன்னொரு நெட்டிசன் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்றும் கமெண்ட் செய்திருந்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று ஆரி சேவ் செய்யப்பட்டார் என்று கமல்ஹாசன் கூறியதை அடுத்து கடுப்பான அர்ச்சனா, இடைவேளையின்போது ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர்களிடம் ’கடவுள் இருக்கானா குமாரு’ என அர்ச்சனா ஆரி சேவ் செய்யப்பட்டது குறித்து விரக்தியுடன் கேள்வி கேட்டிருந்தார் என்பதும் இதனை குத்திக்காட்டும் வகையில் அர்ச்சனா எவிக்ட் செய்யப்பட்டதும், ‘கடவுள் இருக்கான் குமாரு’ என நெட்டிசன்கள் அர்ச்சனாவை கிண்டல் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் அர்ச்சனா மகளிடம் முறையற்ற கேள்விகள் கேட்டு கிண்டல் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ஒருசிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா நடந்து கொண்டதற்கு அவருடைய மகளிடம் இவ்வாறு கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம் இல்லை என்றும், அவருடைய மகள் என்ன பாவம் செய்தார் என்றும் இதுபோன்ற முறையற்ற கேள்விகள் கேட்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

More News

கொரோனா நேரத்தில் புது யுக்தியைப் பயன்படுத்தி காசை அள்ளும் இளைஞர்!!!

புனேவில் 12 ஆம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞர் ஒருவர் கொரோனா நேரத்தில் டீ ஸ்டார்ப் அப் மூலம் லட்சக்கணக்கான பணத்தை மாதம்தோறும் அள்ளி வருகிறார்.

70% வேகமாகப் பரவும் புதுவகை கொரோனா மாதிரி… இந்தியாவிலும் சிக்கலை உருவாக்குமா???

கடந்த வாரம் முதல் பிரிட்டனில் புதுவகை கொரோனா வைரஸ் மாதிரி பரவி வருவதாகக் கூறப்பட்டது.

குழந்தையைப் போல சமத்தா… தூரியில் தூங்கும் கன்றுக்குட்டி… அசத்தல் வீடியோ!!!

மனிதர்கள் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளிலேயே பசு மாட்டிற்கு எப்போதும் அதிக மதிப்பு கொடுக்கப் படுகிறது.

ரஜினிக்கு அனுப்பப்பட்ட சம்மன்: நேரில் ஆஜராவாரா?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அனிதாவுக்கு இப்படியெல்லாம் கோபம் வருமா? அதிர்ச்சி வீடியோ!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்படும் 'மாட்னியா' என்ற டாஸ்க்கில் ஒரு ஹவுஸ்மேட் இன்னொரு ஹவுஸ்மேட் இடம் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்