ப.சிதம்பரத்தின் டீ-காபி டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

  • IndiaGlitz, [Sunday,March 25 2018]

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சற்றுமுன்னர் தனது டுவிட்டரில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள 'காபிடே' கடையில் ஒரு டீயின் விலை ரூ.135 என்றும் காபியின் விலை ரூ.180 என்றும் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 'டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் என்றும் நான் செய்தது சரியா? தவறா? என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரத்தின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். முதன்முதலாக காசு கொடுத்து சாப்பிடுவதால் விலையை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்ததாக ஒரு நெட்டிசனும், சென்னை பரவாயில்லை, டில்லி விமான நிலையத்துல ஒரு காபியின் விலை ரூ.350 என்று ஒரு நெட்டிசனும், காபி கொட்டைக்கு வரி போட்டது நீங்க நிதி அமைச்சராக இருந்த போதுதானே என்று இன்னொரு நெட்டிசனும் பதிலடி கொடுத்துள்ளனர்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு டுவிட்டர் பயனாளி கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் கர்நாடக மாநில முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களது மகன் தான் 'காபி டே' கடைகளின் ஓனர். காங்கிரஸ் பிரமுகரின் மகன் நடத்தும் கடையின் விலை குறித்து இன்னொரு காங்கிரஸ் பிரமுகர் புகார் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக கூறியுள்ளார். எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்: தூத்துக்குடி மக்களுக்கு கமல்ஹாசனின் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.

விராத் கோஹ்லி: உலகின் மிகச்சிறந்த வீரர் விராத் கோஹ்லியின் வெற்றி ரகசியம்

விராத் கோஹ்லி என்ற பெயரை கேட்டாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் வந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய ஆட்டத்தில் ஒரு வெறித்தனம் இருக்கும்.

ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை மிரட்டிய எமன்! அண்ணா சாலையில் பரபரப்பு

இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையிலும் அதன் முக்கியத்துவம் தெரியாமல் இன்னும் பலர் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

ஜெனிவாவில் தனுஷ் பட நாயகியின் திருமணம்

பிரபல நட்சத்திரங்கள் சமீபகாலமாக வெளிநாட்டில் திருமணம் செய்வதை வழக்கமாக்கி வருகின்றனர். சமீபத்தில் விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா திருமணம், இத்தாலியில் நடைபெற்றது என்பது தெரிந்ததே

விஜய்யை முந்துவாரா மகேஷ்பாபு?

கடந்த சில ஆண்டுகளாக இணையதளங்களில் டிரெண்ட் என்றால் அது தமிழ்ப்படங்கள்தான். குறிப்பாக பெரிய நடிகர்களின் டீசர், டிரைலர் ரிலீசாகும்போது யூடியூபில் கிடைக்கும் லைக்ஸ்கள்