ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சனிடம் விசாரணை நடந்ததா? அவரே அளித்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Saturday,August 24 2024]

ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் இயக்குனர் நெல்சன் இடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இந்த கொலை சம்பந்தமாக இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது.

இந்த கொலை வழக்கில் தேடப்படும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா பணம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து விசாரணை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மோனிஷாவை அடுத்து நெல்சன் இடமும் போலீசார் விசாரணை செய்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தன்னிடம் யாரும் விசாரணை நடத்தவில்லை என்றும், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் எதுவும் வரவில்லை என்றும், காவல்துறையில் இருந்து என் வாழ்நாளில் எந்த ஒரு தொலைபேசியோ, நேரிலோ வருமாறு அழைப்பு விடுவதில்லை’ என்றும் தெரிவித்தார். மேலும் இது குறித்து எந்த அதிகாரியிடம் நான் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது’ என்று அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் நெல்சனிடம் விசாரணை நடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

More News

ஹாட்ஸ்டாரில் ஒரு கோலி சோடா.. இன்று இரவு வெளியாகிறது டிரைலர்..!

விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 'கோலி சோடா' என்ற திரைப்படம் வெளியானது என்பதும் அதன் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகிய நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

தமன்னாவை ராதையாக மாற்றிய பேஷன் டிசைனர்.. கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்..!

வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே ராதை கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள்

அரசியலில் விஜய்க்கு சீனியர் எனது மகன் விஜய பிரபாகரன்.. பிரேமலதா

சமீபத்தில் விஜய், கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நிலையில் அன்றைய தின கலந்துரையாடல் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பிரேமலதா விளக்கினார். அவர் கூறியதாவது:

'கோட்' ரன்னிங் டைம் இவ்வளவா? விஜய்யின் முந்தைய படங்களின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் சென்சார் தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

மாரி செல்வராஜின் அடுத்த பட ஹீரோ ரஜினி அல்ல.. இந்த பிரபலம் தான்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் நாயகன் குறித்த தகவல் கிட்டத்தட்ட உறுதி