close
Choose your channels

'நீயா 2'வின் ஆரம்ப புள்ளி 'நாகினி' தான்: இயக்குனர் எல்.சுரேஷ் 

Saturday, March 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெய், வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிய 'நீயா 2' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இந்த விழாவில் பேசியவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்:

ராய்லட்சுமி: மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரி வந்தது குறித்து மகிழ்ச்சி. எனக்கு எத்தனையோ பாம்பு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் சவாலாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன்

இயக்குனர் வெற்றிமாறன்: நானும், இயக்குனர் எல்.சுரேஷும் பாலுமகேந்திரா அவர்களிடம் ஒன்றாக பணிபுரிந்துள்ளோம். எனக்கு சுரேஷின் கடுமையான உழைப்பு பிடிக்கும். அவரது இந்த படம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்

இயக்குனர் சுரேஷ்: இந்த படம் உருவாக ஆரம்ப புள்ளியாக இருந்தது தொலைக்காட்சி தொடராக வரும் 'நாகினி'தான். நான்கு கதைகளை பின்னிக் கொண்டுதான் இப்படத்தின் பயணம் செல்லும்.

நடிகர் பாலா சரவணன்: இப்படத்தில் கமர்ஷியல், காமெடி என அனைத்துமே நன்றாக வந்திருக்கிறது

ஷபீர் இசையமைப்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்த இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment