ஒரே தங்கம்… தரவரிசையில் உச்சம் தொட்ட நீரஜ் சோப்ரா… வியப்பில் ரசிகர்கள்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தற்போது உலகத்தடகள வரிசையில் 14 இடங்கள் முன்னேறி ஒரேயடியாக 2 ஆம் இடத்தை பிடித்து இருக்கிறார். இதனால் உலக அளவில் கவனம் பெற்ற ஒருவராகவும் மாறிவிட்டார்.

இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொணட் நீரஜ் சோப்ரா துனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதோடு உலகச் சாம்பியன் பட்டம்வென்ற வீரர் வாட்டர் கூட தனது முதல் முயற்சியில் 87 மீட்டர் ஈட்டி எறிந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நீரஜ் சோப்ராவின் பெயர் தற்போது உலக அளவில் அறியப்பட்டு வருகிறது.

மேலும் தடகள விளையாட்டில் தனிநபர் பிரிவில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக 2 ஆவது தங்கம் வென்ற வீரரும் இவர்தான். அந்த வகையில் இந்தியர்களின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக துப்பாக்கிச் சுடும்போட்டியில் கலந்து கொண்ட அபினவ் பிந்த்ரா தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

அவருக்குப் பின்பு நீரஜ் இந்தியாவிற்காக தடகளப் பிரிவில் தங்கம்வென்று உலகத் தரவரிசையில் தற்போது 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜெர்மன் வீரரான ஜோஹன்னாஸ் வாட்டர் என்பவர் 1,396 புள்ளிகளுடன் உலகத்தர வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நீரஜ் 14 இடங்கள் முன்னேறி 1,315 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு தங்கத்தால் 14 இடங்கள் முன்னேறி உலகத் தரவரிசையில் 2 ஆம் இடத்தைப் பிடித்திருக்கும் நீரஜ் சோப்ராவை பார்த்து பல முன்னணி வீரர்களும் ஆச்சர்யம் வெளியிட்டு வருகின்றனர். இதைத்தவிர இன்ஸ்டாவில் 1.43 லட்சம் ஃபாலோயர்களை பெற்றிருந்த நீரஜ்க்கு தற்போது 30 லட்சத்தைத் தாண்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தல, தளபதி சந்திப்பு நடந்தது இதற்காகத்தானா? ரசிகர்களை கொண்டாட வைக்கும் தகவல்!

தல தோனி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரின் எதிர்பாராத சந்திப்பு இன்று இணையதளங்களில் ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

பிரபல நடிகையை பிராங்க் செய்த கணவர்: வைரல் வீடியோ!

பிரபல நடிகை ஒருவரை அவரது கணவரே பிராங்க் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

இந்த வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? கமல்ஹாசன் கேள்வி கேட்பது யாரை?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பதும் அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்ற தேர்தலை

ஏர்போர்ட்டில் எதிர்பாராத சந்திப்பு: ஸ்ருதிஹாசன் பதிவு செய்த புகைப்படம் வைரல்

இரண்டு பிரபல நடிகைகள் ஏர்போர்ட்டில் எதிர்பாராமல் சந்தித்து கொண்டதை அடுத்து அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது: கமல்ஹாசன் ஆவேச டுவிட்

அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என்றும் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்து விட்டு ஒன்றை பதிவு செய்து இருப்பது