நேசமணி டிரெண்டுக்கு சொந்தக்காரர் ஒரு தல ரசிகரா? புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

துபாயில் சிவில் எஞ்சினியராக பணிபுரிந்து வரும் விக்னேஷ் பிரபாகர் என்பவர் நேற்று பதிவு செய்த நேசமணி குறித்த டுவீட் இரவு முழுவதும் டிரெண்ட் ஆகி இன்று காலை முதல் உலக டிரெண்டில் முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து பேசாத நெட்டிசன்களே இல்லை எனலாம்.

இந்த நிலையில் விக்னேஷ் பிரபாகர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இவர் துபாயில் பணிபுரிந்து வருவதாகவும், வேலை நேரத்தின்போது டீ குடிக்க கிடைத்த பத்து நிமிடத்தில் இந்த நேசமணி குறித்த பதிவை பதிவு செய்ததாகவும், விளையாட்டாக போட்ட இந்த பதிவு உலக அளவில் டிரெண்ட் ஆகும் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விக்னேஷ் பிரபாகர் ஒரு தல ரசிகர் என்றும், தல படம் வெளியாகும் தினத்தில் டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து துபாய் சென்று பணிபுரியும் ஒரு தமிழ் இளைஞர் பதிவு செய்த ஒரு பதிவு இன்று உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது

More News

நேசமணியை இன்னும் 2000 வருஷத்துக்கு ஒண்ணுமே செய்ய முடியாது: பிரபல காமெடி நடிகர்

டுவிட்டர் பக்கத்தை ஓப்பன் செய்தாலே அதில் பத்து டுவீட்டுகளில் எட்டு டுவீட்டுக்கள் நேசமணி பற்றிய மீம்ஸ்கள், நேசமணி குறித்து பிரபல திரையுலகினர்கள் டுவீட்டுக்கள் தான் கண்ணில் படுகின்றது. 

நேசமணி கேரக்டர் குறித்து வடிவேலு கூறிய அசத்தல் பதில்!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் நேற்று ஒரு சிவில் இஞ்சினியரின் பக்கத்தில் சுத்தியல் குறித்து அவர் நண்பர் கேட்ட ஒரு கேள்விக்கு

நேசமணி மட்டும் மஞ்சள் டர்பனை அணிந்திருந்தால்... ஹர்பஜன்சிங் டுவீட்

ஒரு சிவில் இஞ்சினியர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளையாட்டாக ஆரம்பித்து வைத்த 'நேசமணி' டிரண்ட் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. நெட்டிசன்கள் தங்கள் கற்பனைத்திறனை

உலக அளவில் வைரலாகிய நேசமணி: யாருப்பா இவர்?

சமூக வலைத்தளங்களில் ஒரு விஷயத்தை உலக அளவில் வைரலாக்குவதில் தமிழர்களுக்கு இணை யாருமே கிடையாது. சினிமா நட்சத்திரங்களின் திரைப்படங்கள் முதல் 'கோபேக் மோடி'

4 வருடங்களுக்கு முன் இதே நாளில்.. சூர்யாவுடன் மோதிய சாய்பல்லவி!

சூர்யா, சாய்பல்லவி முதல்முறையாக இணைந்து நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.