நஸ்ரியாவின் ரீஎண்ட்ரி உண்மையா? அவரே அளித்த விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

நடிகை நஸ்ரியா கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும்போதே மலையாள நடிகை பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி, இல்லற வாழ்க்கையில் மூழ்கினார். இந்த நிலையில் சமீபத்தில் அஞ்சலிமேனன் மற்றும் பார்வதியுடன் நஸ்ரியா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்ததால் அவர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து நஸ்ரியா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

பெங்களூர் டேய்ஸ்' படத்திற்கு பின்னர் என்னுடைய அடுத்த படம் எது என்ற கேள்விகள் என்னிடம் பல மாதங்களாக கேட்கப்பட்டு கொண்டே இருந்தது. அவர்களுக்கான எனது பதில், ஆம், மீண்டும் நடிக்கின்றேன். அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் பிரித்விராஜ், பார்வதியுடன் நானும் நடிக்கின்றேன் என்பது உண்மைதான்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் பகத்பாசில் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'நல்ல கதை கிடைத்தால் நஸ்ரியா மீண்டும் நடிப்பார் என்று கூறியிருந்தார். தற்போது அந்த நல்ல கதை கிடைத்துவிட்டதால் நஸ்ரியா மீண்டும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதுல்குல்கர்னி, ரோஷன் மாத்யூ, சித்தார்த் மேனன், மாலா பார்வதி ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு லிட்டில் ஸ்வாயம்ப் ஒளிப்பதிவும், ஜெயச்சந்திரன் மற்றும் ரகுதீக்சித் இசையமைக்கவும் உள்ளனர். அஞ்சலி மேனனின் முதல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.