விக்னேஷ்சிவனுடன் இணைந்து விஸ்வரூப திட்டம் போடும் நயன்?

  • IndiaGlitz, [Wednesday,March 21 2018]

காதல் ஜோடியாக அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பறந்துவரும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விக்னேஷ் சிவனை வைத்து நயன்தாரா பெரிய திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய ஹீரோக்களின் படங்களை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது விக்னேஷ் சிவனையே பெரிய ஹீரோவாக்க முடிவு செய்துள்ளாராம் நயன்.

சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில் அவரையே ஹீரோவாக்க நயன் முடிவு செய்திருப்பதாகவும், அந்த படத்தை அவரே தயாரித்து நாயகியாகவும் நடிக்கவும் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நிஜக்காதலர்களை விரைவில் ரீல் காதலர்களாக திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

கணவர்களை துரத்தாதீர்கள், நடிகைகளுக்கு ஞானவேல்ராஜா மனைவி எச்சரிக்கை

திருமணம் ஆகாத எத்தனையோ இளைஞர்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கும் நிலையில் ஒருசில நடிகைகள், திருமணமானவர்களை குறிவைத்து குடும்பத்தை உடைப்பதாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வரும்

டிஜிபி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற காவலர்கள்: சென்னையில் பரபரப்பு

மன உளைச்சல் காரணமாக காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் இன்று இரண்டு காவலர்கள் சென்னை டிஜிபி அலுவலகம் முன்பே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது: தமிழிசை பொங்கியது ஏன்?

தமிழிசை செளந்திரராஜன் பொதுவாக செய்தியாளர்களிடம் பேசும்போது அமைதியாக பேசுவார். ஆனால் இன்று நாங்கள் பொங்கினால் தமிழகம் தாங்காது என்று அவரே பொங்கி பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை: கவுதம் மேனன்

கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது. அது அவருடைய உரிமை. ஆனால் நான் அவரிடம் இருந்து நல்ல திரைப்படங்களை விரும்புகிறேன்

அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்

திண்டுக்கல் அருகே உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடிக்கு பதிலாக பாஜக கொடி பறந்ததால் அந்த பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.