நயன்தாராவின் மெஹந்தி நிகழ்ச்சி: விருந்தினர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டது தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை காலை நடைபெற இருக்கும் நிலையில் நேற்று முதல் இந்த திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு திருமணத்திற்கு முந்தைய நாள் நடக்கும் மெஹந்தி நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததாகவும் இதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் புகைப்படத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தண்ணீர் பாட்டிலிலும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வெவ்வேறு புகைப்படங்கள் ஒட்டப்பட்டு இருந்ததாகவும், அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் நாளை திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கும் ஆச்சரியமான பரிசு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது

நாளை நடைபெற இருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிரஞ்சீவி உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெறவிருக்கும் இந்த திருமணத்தின் வீடியோவை கௌதம் மேனன் இயக்கி எடுக்க இருப்பதாகவும் இந்த வீடியோ நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.