close
Choose your channels

துபாயில் நயன்தாராவின் உயிர்கள்.. க்யூட் புகைப்படங்கள்..!

Saturday, September 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை பதிவு செய்து எனது உயிர்கள் என்று குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய இரண்டு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் விக்னேஷ் சிவன் சற்றுமுன் துபாய்க்கு குடும்பத்துடன் ஜாலி டூர் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக அவர் துபாயில் எடுத்த தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை பதிவு செய்து நயன்தாராவுக்கும் அதை டேக் செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ‘எனது உயிர்கள்’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் மகன்கள் உயிர் மற்றும் உலகம் இருவரும் நன்றாக வளர்ந்து விட்டார்கள் என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இருப்பினும் எங்கள் லேடி சூப்பர் ஸ்டார் எங்கே? என விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் விக்னேஷ் - நயன் தம்பதியின் இரண்டு குழந்தைகளும் க்யூட்டாக இருக்கிறார்கள் என்றும் பலரும் கண் வைத்து வருவதால் திருஷ்டி சுற்றி போடுங்கள் என்றும் கமெண்ட்களில் பதிவாகி வருகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment