விக்னேஷ் சிவனிடம் பிடித்த விஷயங்கள்: நயன்தாரா இதுவரை சொல்லாத விஷயங்கள்

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் விஜய் டிவியில் இன்று அளித்த பேட்டியில் இதுவரை விக்னேஷ் சிவன் குறித்து சொல்லாத சில விஷயங்களை கூறியிருக்கிறார். விக்னேஷ் சிவனை தனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு அவர் கூறிய விளக்கம் மிகவும் அழகாக இருந்தது.

இதுவரை தான் பார்த்த ஆண்கள் அனைவருமே தங்களுக்கு வரும் துணை செய்யும் வேலையை நிறுத்திவிட்டு வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் குடும்ப பெண்ணாகவே வாழ வைக்க முயற்சிப்பார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் அதில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் அவரிடம் இதுநாள் வரை ஒருமுறை கூட எதற்கும் அனுமதி கேட்டதே இல்லை இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் அவரிடம் பழகிய பின்னர் தான் எனக்கு வேலை அதிகமாக இருந்தது. என்னுடைய ஒவ்வொரு வேலையிலும் அவர் மிகவும் கருத்தாக பார்த்துக்கொண்டார். அதுமட்டுமின்றி நான் செய்யும் வேலையை உற்சாகபடுத்தவும் செய்தார். அது எனக்கு ரொம்ப பிடித்தது என்று கூறினார்.

மேலும் நான் இதுவரை அவரிடம் பழகிய 6 வருடங்களில் ஒவ்வொரு நாளும் அவர் தனது தாய் மற்றும் தங்கை சாப்பிட்டாரா என்பதை போன் செய்து கேட்பார். அவர்கள் சாப்பிட்டு விட்டார்கள் என்று தெரிந்த பிறகு தான் சாப்பிடுவார். ஒரு அம்மாவையும் தங்கையையும் இவ்வளவு அழகாக பார்த்துக் கொள்ளும் ஒருவர் கண்டிப்பாக தனக்கு வரும் துணையையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது’ என்று நயன்தாரா கூறினார்.

More News

நயன்தாராவை முதன்முதலில் அழவைத்த டிடி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பேட்டிவிஜய் டிவியில் இன்று ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பேட்டியில் பல சுவராசியமான நகைச்சுவை அம்சங்கள் இருந்தன.

சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்காதது ஏன்? முதல்முறையாக விளக்கமளித்த நயன்தாரா!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பெயரில் எந்தவித சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்ற நிலையில் சமூக வலைத்தளத்தில் கணக்குகள் தொடங்காதது ஏன் என்பது குறித்து

நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, கல்யாணம் எப்போது? நயன்தாரா பதில்!

விஜய் டிவியில் நயன்தாராவின் பேட்டி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளதாக ஏற்கனவே புரமோஷன் வீடியோ வந்தது என்பதும் அந்த வீடியோவில் அவர் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது

சூப்பர் சிங்கர் பிரகதியா இவர்? வைரலாகும் பிகினி புகைப்படங்கள்

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர்

அஜித்தை வைத்து 'பில்லா 3' இயக்குவீர்களா? இயக்குனர் விஷ்ணுவர்தன் பதில்!

அஜித் நடித்த 'பில்லா' மற்றும் 'பில்லா 2' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 'பில்லா' படத்தின் மூன்றாம் பாகம் எடுக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் விஷ்ணுவர்தன்