close
Choose your channels

விக்னேஷ் சிவனிடம் பிடித்த விஷயங்கள்: நயன்தாரா இதுவரை சொல்லாத விஷயங்கள்

Sunday, August 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் விஜய் டிவியில் இன்று அளித்த பேட்டியில் இதுவரை விக்னேஷ் சிவன் குறித்து சொல்லாத சில விஷயங்களை கூறியிருக்கிறார். விக்னேஷ் சிவனை தனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு அவர் கூறிய விளக்கம் மிகவும் அழகாக இருந்தது.

இதுவரை தான் பார்த்த ஆண்கள் அனைவருமே தங்களுக்கு வரும் துணை செய்யும் வேலையை நிறுத்திவிட்டு வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் குடும்ப பெண்ணாகவே வாழ வைக்க முயற்சிப்பார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் அதில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் அவரிடம் இதுநாள் வரை ஒருமுறை கூட எதற்கும் அனுமதி கேட்டதே இல்லை இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் அவரிடம் பழகிய பின்னர் தான் எனக்கு வேலை அதிகமாக இருந்தது. என்னுடைய ஒவ்வொரு வேலையிலும் அவர் மிகவும் கருத்தாக பார்த்துக்கொண்டார். அதுமட்டுமின்றி நான் செய்யும் வேலையை உற்சாகபடுத்தவும் செய்தார். அது எனக்கு ரொம்ப பிடித்தது என்று கூறினார்.

மேலும் நான் இதுவரை அவரிடம் பழகிய 6 வருடங்களில் ஒவ்வொரு நாளும் அவர் தனது தாய் மற்றும் தங்கை சாப்பிட்டாரா என்பதை போன் செய்து கேட்பார். அவர்கள் சாப்பிட்டு விட்டார்கள் என்று தெரிந்த பிறகு தான் சாப்பிடுவார். ஒரு அம்மாவையும் தங்கையையும் இவ்வளவு அழகாக பார்த்துக் கொள்ளும் ஒருவர் கண்டிப்பாக தனக்கு வரும் துணையையும் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது’ என்று நயன்தாரா கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment