விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? வைரலாகும் நயன் வீடியோ!

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என நயன்தாரா கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்பதும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்பதும் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர் என்பதை சிம்பாலிக்காக இன்ஸ்டாகிராமில் கூறினார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் டிடி கேட்கும் சுவராசியமான பல கேள்விகளுக்கு நயன்தாரா பதில் சொல்கிறார்.

அதில் ஒன்று நயன்தாரா கையில் அணிந்துள்ள மோதிரம் குறித்து டிடி கேட்டபோது எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று நயன்தாரா தெரிவிக்கின்றார். அதேபோல் விக்னேஷ் சிவனிடம் தனக்கு பிடித்தது, பிடிக்காதது ஆகியவை குறித்தும் அவர் அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். சுவராசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்: பதிலடி கொடுத்த வேம்புலி!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் குறித்த மீம்ஸ் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி

சமூக நீதி பேசிவிட்டு, தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்கிறது அரசு.....! சீமான் காட்டம்.....!

திமுக அரசு சமூக நீதியென்று பேசி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் சமூகத்தில் விளிம்பில் உள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு வஞ்சகம் செய்து ஏமாற்றுகிறது

நுழைவு வரியை முழுமையாக செலுத்திய விஜய்: எவ்வளவு தெரியுமா?

பிரபல நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்

பள்ளிகளுக்கு ஒலிம்பிக் வீரர்களின் பெயர்கள்… அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப்!

2021 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

விபத்தில் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்!

படப்பிடிப்புக்கு செல்லும்போது விபத்து நடந்த நிலையில் விபத்தில் காயம் அடைந்த போதிலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது