சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் 'அறம்' பார்த்த நயன்தாரா

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெரும்பாலான ஊடகங்கள் மாஸ் ஸ்டார்களின் படங்களுக்கு கூட 4 ஸ்டார்கள் கொடுத்ததில்லை. ஆனால் 'அறம்' படத்திற்கு 4 ஸ்டார்களுக்கும் மேல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நயன்தாராவுக்கு தான் நடிக்கும் எந்த படத்திற்கும் புரமோஷன் செய்யும் வழக்கமில்லை. ஆனால் இந்த படத்திற்கு ரிலீசுக்கு முன்னரே ஒருசில புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் இன்று அவர் சென்னை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து 'அறம்' திரைப்படத்தை பார்த்தார்.

நயன்தாரா நடித்த பல காட்சிகளுக்கு ரசிகர்கள் கைதட்டி கரகோஷம் செய்ததை அவர் நேரில் கண்டு ரசித்தார். நயன்தாரா வருகையால் திரையரங்கில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை திரையரங்கு நிர்வாகம் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.